டெல்லி : பாகிஸ்தானுக்கு சென்று உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களின் சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்று பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவை கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் இந்திய குடிமக்கள் யாரும் பாகிஸ்தானில் எந்த ஒரு கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கல்வி சான்றிதழுக்கு வேலைவாய்ப்புக்கான தகுதி கிடையாது என்றும் தொடர்ந்து இந்தியாவில் உயர்கல்வியை தொடர முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.