ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன வழக்குகளில் தண்டனை பெற்று வருகின்றார். தொரந்தோ கருவூலத்தில் ரூ.139 கோடியை முறைகேடாக எடுத்ததாக தொடரபட்ட வழக்கில் கடந்த பிப்ரவரியில் சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அடுத்து அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமடைந்தது.