திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், போளிவாக்கம் கிராமம், குருபிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமிகள் ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷண்முகநாயகன் மற்றும் 18 சித்தர்கள் ஞானிகள் ஆலயத்திற்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்களை ஓத கோயில் உச்சியில் அமைக்கப்பட்ட கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என கோஷமிட்டு சுவாமியை வணங்கினார். பிறகு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.