லால்குடி: லால்குடியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 514 ரேசன் அரிசி மூட்டைகள் சிக்கியது மில் உரிமையாளர் தப்பி ஓடி விட்டார்.திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக லால்குடியில் இருந்து மாவட்ட வழங்கல் அதிகாரி இளவரசியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் உத்தரவின் பேரில் லால்குடி வட்ட வழங்கல் அதிகாரி விஜய், அபிஷேகபுரம் கிராம நிர்வாக உதவியாளர் அரிகிருஷ்ணன் மற்றும் லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோருடன் லால்குடி தேரடி வீதி தேரடி பகுதியில் அமைந்துள்ள மதி டிரேடர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் சோதனை செய்தனர்.