சிவகாசி: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் அழியும் கலை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொறுவரும் ஒருவித பிரச்சனை தீர்வுக்காக வந்து செல்கின்றனர். அதிகாரிகள் இல்லாத நேரத்தில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளுக்காக தினமும் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா அலுவலக நுழைவு வாயில் சுவர் மற்றும் சுற்றுசுவர்களில் ஒட்டபட்டிருந்த விளம்பர போஸ்டர்கள், தேவையற்ற விளம்பரங்களை அப்புறபடுத்தி அழகு ஓவியங்கள் வரையப்பட்டன. வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் கண்டு தாலுகா நிர்வாக அதிகாரிகளை பொதுமக்கள் பலரும் பாராட்டிச் சென்றனர். தாலுகா அலுவலகத்திற்கு வருவோரை நின்று பார்க்க வைப்பதில் ஓவியங்கள் முக்கிய பங்கு வகித்தன.