பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் சமீபத்திய ஊரடங்கிற்கு பிறகு முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. சீனாவில் பல்வேறு மாகாணங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சீன பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத பரவல் ஏற்பட்டுள்ளது. இங்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க்கு தொற்று பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சீன அரசு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.