மயிலாடுதுறை: தருமபுரி ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரி ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானத்தில் உள்ள ஞானசம்பந்தர் நாளை ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க இருப்பதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்டம் எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.