திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து  வருவதாலும், தமிழ் புத்தாண்டு,  புனித வெள்ளி மற்றும் சனி ,ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக நாளை புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதங்கள் மூலம்  விஐபி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படாது. எனவே முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதங்களை வழங்க வேண்டாம். சிபாரிசு கடிதங்களைப் பெற்ற பக்தர்களும் இந்த நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனை கருத்தில்  கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories: