தென்காசி: குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நேற்று முன்தினம் வரை வறண்டு காணப்பட்ட அருவிகளில் சற்று தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்தது. சுட்டெரித்த அனலின் தாக்கம் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வறண்ட நிலையை அடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.