டெல்லி: தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் பிரச்னை குறித்து ஆலோசித்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.