திருவள்ளூர்: மாணவி ஒருவரிடம் செல்போனில் தகாத முறையில் பேசிய பேராசிரியரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி பொன்னேரி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியில் பயிலும் மாணவியிடம் உதவிப்பேராசிரியர் மகேந்திரன் என்பவர், வீட்டுக்கு வா என செல்போனில் அழைத்த விவகாரத்தில், நேற்று பொன்னேரி போலீசார் மகேந்திரனை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பொன்னேரி அரசு கல்லூரியில் பயிலும் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பொன்னேரி திருவெற்றியூர் சாலையில் கல்லூரி எதிரே அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.