கும்பகோணம்:கும்பகோணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அரிவாளால் வெட்ட முயற்சிக்கும் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியள்ளது பேருந்தில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணத்திலிருந்து தாராபுரம் வழியாக எலும்பிச்சைகாய்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்த மினி பேருந்தில் ஓட்டுநர் வசந்த் மற்றும் நடத்துனர் விக்னேஷ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர் பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் தாராசுரம் பேருந்து நிலையத்துக்கு முன்னாதாக இறங்க வேண்டும் என்றார் அங்கு பேருந்து நிறுத்தம் இல்லாததால் அந்த இடத்தில் பேருந்து நிற்காது என ஓட்டுனரும் நடந்துனரும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பயணி சென்று கொண்டிருந்த பேருந்தின் ஸ்டேரிங்யை பிடித்து நிறுத்துமாறு கூறி தகராறில் ஈடுபட்டார் பேருந்தில் விபத்து ஏற்படும் என்று பேருந்தை சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தினர் பேருந்து சாவியை எடுத்து கொண்டு பயணி தகராறில் ஈடுபட்டார் இதனால் ஓட்டுநர் நடத்துனரிடம் அந்த பயணி தகறாரில் ஈடுபட்டார்.