நாகர்கோவில்: இந்த ஆண்டு 7 இடங்களில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.