கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தேர்தல் முடிந்து விட்டதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? என்று மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

The post கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: