மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 11வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 4, தவான் 33, ராஜபக்சே 9 ரன்னில் வெளியேற லியாம் லிவிங்ஸ்டன் 32 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 60 ரன் அடித்தார். ஜிதேஷ் சர்மா 26 ரன் எடுத்தார். சென்னை பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 181 ரன் இலக்கை துரத்திய சென்னை அணியில் கெய்க்வாட் 1, மொயின் அலி 0 என வெளியேறினர். ராபின் உத்தப்பா 13, ராயுடு 13, ஜடேஜா 9, டோனி 23 , பிராவோ 0, பிரிட்டோரியஸ் 8 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக ஷிவம் துபே 30 பந்தில் 57ரன் எடுத்தார். 18 ஓவரில் 126 ரன்னுக்கு சென்னை ஆல்அவுட் ஆனது. 54 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. பஞ்சாப் பந்து வீச்சில் ராகுல் சாகர் 3, வைபவ் அரோரா, லிவிங்ஸ்டன் தலா 2விக்கெட் வீழ்த்தினர். 3வது போட்டியில் பஞ்சாப்பிற்கு இது 2வது வெற்றியாகும். சென்னை ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது. 60 ரன் அடித்ததுடன் 2 விக்கெட் வீ்ழ்த்திய லிவிங்ஸ்டன் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.