திருவண்ணாமலை: சமூக வலைத்தளங்களில் பிரபலமான பெண் சாமியார் அன்னபூரணி அரசு, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரமம் தொடங்க பூமி பூஜை நடத்தியுள்ளார். செங்கல்பட்டை சேர்ந்த அன்னபூரணி என்பவர் புத்தாண்டு தினத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் ஆசி வழங்குவதாக கூறி விளம்பரம் செய்தார். அந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்போது மற்றொரு பெண்ணின் கணவரை அபகரித்ததாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அன்னபூரணி தோன்றியிருந்த வீடியோக்களும் வெளியானது. அரசு என்ற அந்த நபர் இறந்தவுடன், அவருக்கு சிலை வைத்து வழிபட்டதுடன், அன்னபூரணி அரசு அம்மா என தன்னை அழைத்துக்கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிகளையும் நடத்த தொடங்கினார்.