புதுடெல்லி: வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.இதனால், 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட், சிவசேனா எம்பி.க்கள் மாநிலங்களவையில் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது இப்பிரச்னையை எழுப்பிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், ‘‘800 மருந்துகளின் விலைகள் 11 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும்.