திருத்தணி: திருத்தணி அடுத்த புனிமங்காடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். திருத்தணி அடுத்த புனிமங்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அதில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் விமல்ராஜ், தினா என்ற சிறுவனுக்கு படுகாயம் அடைந்தனர். அங்கன்வாடி மையத்தில் 35 குழந்தைகள் உள்ளன. 18 ஆண் குழந்தைகளும் 17 பெண் குழந்தைகளும் உள்ளன. மற்ற குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக வெளியே சென்ற பொது அங்கன்வாடி மையத்திற்குள் இருந்த விமலராஜ் , தினா மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.