போடி: போடி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். தேனி மாவட்டம், போடிமெட்டு அருகே சூரியநெல்லி மலைக்கிராமம் சிங்குகண்டத்தை சேர்ந்தவர் பாபு(70). இவர் நேற்று அதிகாலை ஏல தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது காட்டுயானை, பாபுவை தாக்கி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாபு உயிரிழந்தார். பின்னர் காட்டுயானை அங்கிருந்து சென்றுவிட்டது.