புதுடெல்லி: தமிழகத்தில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தில், \”வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு போதுமான வேலை, கல்வி போன்றவற்றில் உரிய வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். மேலும் வன்னியர் சமுதாய மக்கள் பிறருடன் போட்டி போட முடியாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை நியாயப்படுத்த எந்த விளக்கமும் கிடையாது. அவர்கள் படிப்பதற்கு கூடுதல் உதவிகளையோ அல்லது வசதிகளையோ செய்து தரலாம். ஆனால் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவித வழிவகையும் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டது.