புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பராமரிப்பு பணி, மேற்பார்வை குழு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் இருமாநில அரசுகளும் தெரிவித்துள்ளன. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த முறை நடந்த விசாரணையின் போது, ‘முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவில் ஏன் மாற்றங்களை செய்யக் கூடாது?’ என நீதிபிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அணை பாதுகாப்பு, பராமரிப்பில் மாற்றம் முல்லை பெரியாறு தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் பேச்சு: உச்ச நீதிமன்றத்தில் தகவல்
