இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்த பறவை என்ற புதிய திட்டம் துவக்கம் : நீதிபதி பிரகாஷ், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கி வைப்பு

சென்னை: சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள  கலந்தாய்வு கூடத்தில் நேற்று நடைபெற்ற  நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதியரசர்  பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பறவை திட்டத்தை துவக்கி  வைத்தனர். இந்த புதிய  திட்டத்தின் முக்கியமான நோக்கம், மது, போதை மற்றும் கஞ்சா போன்ற தீய  பழக்கங்களுக்கு அடிமையான இளம் குற்றவாளிகளை அவர்களுக்கென தனியாக ஆலோசனை, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆலோசனை, சட்ட உதவி, தொழில்  வழிகாட்டுதல், அவர்களது திறமையை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பயிற்சி வகுப்பு அளித்து தக்க வேலை வாய்ப்பு பெற உதவி செய்தல், வாழ்வை நலமாக்க  சிறையிலேயே முறையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி, சமுதாயத்தில்  சரியான பாதையில் கொண்டு செல்ல அவர்களை நல்வழிபடுத்துவதாகும்.  மேலும், இத்திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்க சிறைத்துறை, சமூக நல  பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக்குழு, வேலை வாய்ப்பு மற்றும்  பயிற்சி துறை ஆகிய அரசு துறைகளில் இதற்கென ஒரு அலுவலரை நியமித்துள்ளனர்.

Related Stories: