காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கள்ள சந்தையில் விற்க முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் காஞ்சிபுரம் மார்ச் 27: காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில், 1.05 டன் ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆசாமியை கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமம் பெருமாள் கோயில் பின்புறம் ரேஷன் அரிசி கடத்த படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார், நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, வெட்டவெளியில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதன் அருகில், ஒரு ஆசாமி இருப்பதை கண்டனர்.