ஜெட்டா: சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஆலை கிடங்கில் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியதால், தீ கொழுந்துவிட்டு எரிகிறது. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். ஏமன் அரசுக்கு சவுதி ஆதரவு தந்து வரும் நிலையில் அந்நாட்டின் மீதும் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதி கிளர்ச்சிப்படையினருக்கு ஈரான் ஆதரவாக இருந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் ஜெட்டாவில் உள்ள அரசின் அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் கிடங்கு மீது நேற்று ஹவுதி கிளர்ச்சிப் படையினர் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். எண்ணெய் கிடங்குகள் மீது ஏவுகணைகள் வந்து விழுந்ததால், இரு கொள்கலன்கள் பயங்கரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.