வெலிங்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை 23வது லீக் ஆட்டம் நேற்று வெலிங்டன்னில் நடந்தது. தெ.ஆப்ரிக்கா-வெ.இண்டீஸ் மகளிர் அணிகள் மோத இருந்த இந்த ஆட்டம் மழை காரணமாக பல மணி நேரம் தாமதமாக தொடங்கியது. கூடவே ஓவர்களின் எண்ணிக்கை 26ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட தெ.ஆப்ரிக்கா 6ஓவருக்குள் 4 விக்கெட்களை இழந்து 25ரன் எடுத்தது. அடுத்து இணை சேர்ந்த மிக்னன், காப் இணை வேகம் காட்ட, மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தெ.ஆப்ரிக்கா 10.5ஓவரில் 61ரன் எடுத்திருந்தது.