மேலூர் : மேலூர் அருகே கடத்திச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள ‘அம்பர் கிரீஸ்’ எனப்படும் திமிங்கல எச்சம் கைப்பற்றப்பட்டது.மதுரை மாவட்டம், மேலூர் சிவகங்கை சாலையில் நேற்று முன்தினம் இரவு எஸ்பி தனிப்படை எஸ்ஐ நாகநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிவகங்கையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனையிட்டனர். அதில், ‘அம்பர்கிரீஸ்’ எனப்படும் திமிங்கல எச்சம் 2.5 கிலோ இருந்தது. இதன் மதிப்பு ரூ.2.5 கோடி ஆகும்.