ஹாமில்டன்: ஐசிசி மகளிர் கோப்பை தொடரில் வங்கதேசத்தை 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது.செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனைகள் மந்தனா, ஷபாலி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர். மந்தனா 30, ஷபாலி 42 ரன் எடுத்து வெளியேற, கேப்டன் மிதாலி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். இந்தியா 15.4 ஓவரில் 74 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திடீர் சரிவை சந்தித்தது.அடுத்து வந்த ஹர்மன்பிரீத் 14 ரன்னில் வெளியேறினார். ரிச்சா 26 ரன் குவித்து ஸ்கோர் உயர உதவினார். பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசிய யாஷ்டிகா 50 ரன்னில் (80 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஸ்நேஹ் ராணா 23 பந்தில் 27 ரன் விளாசி பெவிலியன் திரும்பினார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்தது. பூஜா வஸ்த்ராகர் 30 ரன் (33 பந்து, 2 பவுண்டரி), ஜுலன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் ரிது மோனி 3, நஹிதா 2, ஜஹனாரா ஒரு விக்கெட் எடுத்தனர்