நீட் தேர்வால் இந்தியாவில் பல மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவு நசுக்கப்பட்டுள்ளது: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு: நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் கர்நாடக மாணவர் நவீன் ஆத்மா சாந்தியடையும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். உக்ரைன் போரில் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் உயிரிழந்த நிலையில் குமாரசாமி டிவிட்டரில் பதிவிட்டார். இந்தியாவில் நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவு நசுக்கப்பட்டு வெளிநாட்டில் சென்று படித்த போது நவீன் பலியாகிவிட்டார், நீட் தேர்வால் இந்திய நாட்டில் பல மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நசுக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி குற்றம்சாட்டினார்.  

Related Stories: