பாட்னா : வங்காளதேசத்தில் பயணிகள் படகு ஒன்றை சரக்கு கப்பல் இடித்து மூழ்கடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.தலைநகர் டாக்கா அருகே உள்ள சித்தாளட்சியா ஆற்றில் உள்நாட்டு சரக்கு மற்றும் பயணிகள் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நேற்று வேகமாக வந்த ஒரு சரக்கு கப்பல் கட்டுப்பாட்டை இழந்து 60 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த படகின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சரக்கு கப்பல் பயணிகள் படகினை சிறிது தூரம் இழுத்துச் சென்று மூழ்கடித்துவிட்டது.