குவாங்ஸி: சீனா குவாங்ஸி மாகாணத்தில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனத்தில் போயிங் 737, 737 MAX என இரண்டு பிரிவுகளாக விமானங்கள் உள்ளன. இதில் 737 MAX வகை விமானங்கள் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய கண்டுபிடிப்பான போயிங் 737 விமானத்தில் பெரிய அளவில் கோளாறுகள் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க் ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.