ஐஎஸ்எல் கால்பந்து பைனலில் கேரளாவை வீழ்த்தி ஐதராபாத் கோப்பையை வென்றது

பதோர்தா: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில், ஐதராபாத் எப்சி  பெனால்டி ஷூட் அடிப்படையில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. ஐதராபாத் - கேரளா அணிகளிடையே நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த கால்பந்து போட்டியில், இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியதால் இடைவேளையின்போது 0-0 என் சமநிலை வகித்தன.

2வது பாதி ஆட்டத்தில் தீவிர தாக்குதலை மேற்கொண்ட கேரள அணிக்கு 68வது நிமிடத்தில் ராகுல் அபாரமாக கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். கேரளா வெற்றியை வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88வது நிமிடத்தில் ஐதராபாத் வீரர் டவோரா அபாரமாக கோல் அடிக்க 1-1 என மீண்டும் சமநிலை ஏற்பட்டது. மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து, சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க 30 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இரு அணிகளும் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடியது.  இதில் கடைசியாக பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்சி அணி கேரளாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

Related Stories: