சென்னை: தேமுதிக அனைத்து மாவட்ட மகளிர் அணியினரின் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இதில் அனைத்து மாவட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். கூட்டத்தில் செயின் பறிப்பு, கொள்ளை, கொலை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை அதிகமாக பயன்படுத்தி குற்றங்களை கண்டுபிடிக்கவும், தடுத்திடவும் பெரும்பான்மையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்திட வேண்டும். நீட் தேர்வில் ஒரு நல்ல முடிவை எடுத்து மாணவ-மாணவிகளை குழப்பத்திலிருந்து காப்பாற்றி தமிழக அரசு உதவிட வேண்டும்.