கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் திருபுவனத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி கோயிலில் உருத்திரபாதத் திருநாள் விழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 9ம் தேதி பெரிய கொடியேற்றமும், அதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.