முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு - சாம்சங் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடப்பாண்டில் சாம்சங் நிறுவனம் ரூ.1,800 கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. உலகளவில் சந்தை மதிப்பில் 8வது பெரிய நிறுவனமாக சாம்சங் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று கூறினார்.

Related Stories: