பாம்போலிம்: ஐஎஸ்எல் கால்பந்து தொடர் 2வது அரையிறுதியின் முதல் கட்ட ஆட்டத்தில் ஐதராபாத் எப்சி - ஏடிகே மோகன் பகான் அணிகள் இன்று மோதுகின்றன. 2019ல் அறிமுகமான ஐதராபாத் அணி, முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 20 லீக் ஆட்டங்களில் 38 புள்ளிகளுடன் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியு) 2வது இடம் பிடித்தது. அரையிறுதியில் 3 முறை சாம்பியனான ஏடிகே மோகன் பகானுடன் மோதுகிறது. ஏடிகே லீக் சுற்றில் 37 புள்ளிகளுடன் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி) 3வது இடம் பிடித்தது. ஐஎஸ்எல் தொடரில் ஏடிகே 6வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அவற்றில் 4 முறை பைனலுக்கு முன்னேறியதுடன், அதிக முறை கோப்பை வென்ற அணியாகவும் உள்ளது.