புதுடெல்லி: 2022 நீட் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு வயது உச்ச வரம்பை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கி உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு, பொதுப் பிரிவினருக்கு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 என்றும் கடந்த 2017ம் ஆண்டு சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2021, அக்.21ல் நடந்த 4வது தேசிய மருத்துவ ஆணையம் கூட்டத்தில், நீட்- யுஜி தேர்வில் கலந்து கொள்வதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் இருக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.