கொல்கத்தா: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில், சமாஜ்வாடி கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் மாலை வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு தனி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, நடுவானில் விமானம் திடீரென கடுமையாக குலுங்கியது. இதனால், மம்தா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். விமானி சாதூர்யமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக இயக்கி தரையிறக்கினார்.