சென்னை: ஆவடி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் ஜி.உதயகுமார். இவர் 9வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுக வட்டச்செயலாளர். 10ம் வகுப்பு படித்துள்ளார். திருமுல்லைவாயில் காலனி, திருவள்ளுவர் தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். தந்தை குணசேகரன் ஓய்வுபெற்ற பாதுகாப்பு துறை ஊழியர். உதயகுமாரின் மனைவி வினாயகி(28). ஜெய் ஆதித்யா (4) என்ற மகன் உள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர். இவரது குடும்பமே திமுக குடும்பம். இவரை, ஆவடி மாநகராட்சி மேயராக திமுக அறிவித்துள்ளதை அடுத்து கட்சியினர் பெருமை அடைந்துள்ளனர். மேயர் வேட்பாளர் ஜி.உதயகுமார் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
