ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவரப்பட்டு கிராமத்தில் நேற்று மாலை தனியார் திருமண மண்டபம் அருகே வெள்ளை நிறத்தில் ஆந்தை ஒன்று வித்தியாசமான முறையில் கத்திக்கொண்டிருந்தது. அதனை பொதுமக்கள் பார்த்தனர். அப்போது பொதுமக்களை பார்த்த ஆந்தை வேகமாக கத்தத் தொடங்கியது . மேலும் அதன் அருகில் சென்று பார்த்தபோது அது ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெள்ளை நிறம் கொண்ட அரிய வகை ஆந்தை என தெரியவந்தது.