கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் எல்லா விவகாரங்களிலும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையை வரும் 7ம் தேதி கூட்டும்படி தங்காருக்கு அரசு பரிந்துரை செய்தது. அது, விதிமுறைப்படி இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பினார். பின்னர், புதிதாக அனுப்பப்பட்ட பரிந்துரையில். மார்ச் 7ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பேரவையைக் கூட்டும்படி தெரிவிக்கப்பட்டது.