மும்பை: 10 அணிகள் பங்கேற்றும் 15வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 26ம்தேதி தொடங்கி மே 29ம்தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை, புனேவில் மட்டும் லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ, பி பிரிவில் சென்னை, ஐதராபாத், பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு அணி அதே குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.