காஞ்சிபுரம்: நாளை காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ளதாக க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமையில் நடக்கிறது. மாவட்ட துணை செயலாளர்கள் வெளிகாடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா, மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.