ஜகார்த்தா:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் உணரப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு சுமத்ரா தீவின் பாசமான் ஆளுகை அருகே 17 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் அதன் அளவு 6.2 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.