இலங்கைக்கு எதிராக இன்று முதல் டி.20போட்டி; பாபர் அசாம் சாதனையை சமன் செய்வாரா ரோகித்சர்மா?

லக்னோ: இந்தியா-இலங் கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைக்க காத்திருக்கிறது. இன்று இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக டி.20யில் 10வது வெற்றியாக அமையும். டி.20யில் அதிக ரன் எடுத்தவர்களில் ரோகித்சர்மா 122 போட்டியில் 3263 ரன்னுடன் 3வது இடத்தில் உள்ளார். இன்று இவர் 37 ரன் எடுத்தால் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.

நியூசிலாந்தின் குப்டில் 3299, கோஹ்லி 3296 ரன்னுடன் முதல் 2 இடங்களில் உள்ளனர். மேலும் ரோகித்சர்மா இன்று 63 ரன் எடுத்தால் குறைந்த இன்னிங்சில் டி.20 போட்டியில் 1000 ரன் அடித்த கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாமுடன் பகிர்ந்து கொள்வார். கேப்டனாக பாபர் அசாம் 26, கோஹ்லி 30, டூபிளசிஸ் 31, பிஞ்ச் 32 இன்னிங்சில் ஆயிரம் ரன்னை கடந்தனர். ரோகித்சர்மா கேப்டனாக 25 டி.20 போட்டியில் 937 ரன் எடுத்துள்ளார்.  இதில் 21 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: