லக்னோ: இந்தியா-இலங் கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைக்க காத்திருக்கிறது. இன்று இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக டி.20யில் 10வது வெற்றியாக அமையும். டி.20யில் அதிக ரன் எடுத்தவர்களில் ரோகித்சர்மா 122 போட்டியில் 3263 ரன்னுடன் 3வது இடத்தில் உள்ளார். இன்று இவர் 37 ரன் எடுத்தால் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.