பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்ற 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன. முதல் அரையிறுதியில் பாட்னா பைரட்ஸ்- உ.பி.யோத்தா அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே பாட்னா ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் 38-27 என்ற புள்ளி கணக்கில் பாட்னா வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது அரையிறுதியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகள் சேர்த்ததால் விறுவிறுப்பாக இருந்தது.