புரோ கபடி லீக்; பாட்னா பைரட்ஸ்-தபாங் டெல்லி பைனலில் நாளை பலப்பரீட்சை

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்ற 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன. முதல் அரையிறுதியில் பாட்னா பைரட்ஸ்- உ.பி.யோத்தா அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே பாட்னா ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் 38-27 என்ற புள்ளி கணக்கில் பாட்னா வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது அரையிறுதியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகள் சேர்த்ததால் விறுவிறுப்பாக இருந்தது.

முதல் பாதியில் 17-16 என பெங்களூரு முன்னிலை பெற்றது. 2வது பாதியில் டெல்லி வீரர்கள் சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்தனர். முடிவில் 40-35 என டெல்லி வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.  டெல்லியின் நட்சத்திர ரெய்டர் நவீன்குமார் 14 புள்ளியும், பெங்களூரு தரப்பில் கேப்டன் பவன்குமார் ஷெராவத் 18 புள்ளிகளும் சேர்த்தனர். நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் பைனலில் பாட்னா பைரட்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

Related Stories: