லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4 ஆம் கட்ட தேர்தலில் காலையிலேயே வாக்களித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, செய்தியாளர்களை சந்தித்து சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக பேட்டி அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியிட்டாலும், அதன் தலைவர் மாயாவதி எந்த தொகுதியிலும் போட்டி இடவில்லை. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4ஆம் கட்ட தேர்தலில் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் மாயாவதி காலையிலேயே வாக்களித்தார்.