பாட்டில், டியூப் லைட்டால் தாக்கி காங்கிரஸ் வேட்பாளர் மகன்கள் மண்டை உடைப்பு: தேவகோட்டையில் அதிமுகவினர் அராஜகம்

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி 11வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் ராம்நகர் தனியார் பள்ளியில் செயல்பட்டது.  இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பவுல் ஆரோக்கியசாமியின் ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி அருகே டெண்ட் அமைத்து அமர்ந்திருந்தனர். அப்போது, அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் ஆதரவாளர்களான பொன்னுச்சாமியின் மகன்கள் பாலகிருஷ்ணன், பாலாஜி மற்றும் சிலர் வந்தனர்.

அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் வேட்பாளரின் மகன்கள் பிரகாஷ், ரெக்ஸ்ஆண்டோ மற்றும் ஜோசப் மகன் ராஜன் ஆகியோரை பாட்டில் மற்றும் டியூப் லைட்களால் கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதில், பிரகாஷ், ரெக்ஸ்ஆண்டோ மற்றும் ராஜன் ஆகிய மூவரும் ரத்தம் சொட்டிய நிலையில் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் மூவரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: