சென்னை: புரோ கபடி போட்டிக்கான நடப்புத் தொடர் கொரோனா பீதி காரணமாக பெங்களூர் நகரில் மட்டும் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்கள் விளையாட வேண்டும். லீக் சுற்று பிப்.19ம் தேதியுடன் முடிவடைகிறது. முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும். பாட்னா பைரேட்ஸ் 80 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதுடன் பிளோ ஆப் வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்துள்ளது. கூடவே நேற்று காலை நிலவரப்படி அடுத்தடுத்த இடங்களில் உள்ள அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, யுபி யோதா, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்டன், குஜராத் ஜெயன்ட்ஸ், யு மும்பா அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பில் உள்ளன.