துபாய் சாம்பியன் ஷிப் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மகளிருக்கான துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-3, 6-2 என சக நாட்டைச் சேர்ந்த எலெனா கேப்ரியலாவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். துனிசியாவின் ஓன்ஸ் ஜாபூர் 6-3, 6-1 என அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வென்றார்.

செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா, மார்கெட்டா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ, உக்ரைனின் டயானா, ரஷ்யாவின் வெரோனிகா, சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேனும் 2வது சுற்றில் வெற்றிபெற்று கால் இறுதிக்குள் நுழைந்தனர். இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் லூசி ஹ்ரடேக்கா ஜோடி 7-5, 6-3 என்ற செட் கணக்கில், செர்பியாவின் அலெக்ஸாண்ட்ரா, ஜப்பானின் ஷுகோ அயோமா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Related Stories: