தந்தையின் கனவு நிறைவேறியது : சி.எஸ்.கே-வின் இளம் வீரர் நெகிழ்ச்சி

19 வயதுக்கு பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தைக்கு சிஎஸ்கே அணி மிகவும் பிடிக்கும். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். எங்களை விட அவர் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

அவர் எங்கிருந்தாலும் என்னை ஆசிர்வதிக்கட்டும். என்னிடம் வார்த்தைகளே இல்லை. பணத்தை விட விளையாடுவது தான் எனக்கு முக்கியம். நான் நன்றாக விளையாடினால் பணம், புகழ் எல்லாம் தேடி வரும். எனவே, நான் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன். கேப்டன் டோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வேன்’’ என்றார்.

Related Stories: